​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்" என பரவிய குறுஞ்செய்தி.. ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்

Published : Aug 17, 2024 10:01 PM

"மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்" என பரவிய குறுஞ்செய்தி.. ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்

Aug 17, 2024 10:01 PM

மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய பெண்கள் செல்போன்களுக்கு வந்த குறுஞ்செய்திகளை காட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பெண்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நகலை அலுவலர்களிடம் கொடுத்து சென்றனர்.